வருகிற மேமாதம்போர்த்துக்கல்நாட்டில்
திருத்தந்தைஎல்லாருக்கும் தம் உரைகளைவழங்குவார்
சன.14,2010 திருத்தந்தை வருகிற மே மாதம் போர்த்துக்கல் நாட்டிற்கும், சிறப்பாக பாத்திமா
அன்னை திருத்தலத்திற்கும் திருப்பயணம் மேற்கொள்ளும் போது, விசுவாசிகள், விசுவாசிகள் அல்லாதோர் என அனைத்து மக்களுக்கும்
உரையாற்றுவார் என்று போர்த்துக்கல் ஆயர்கள் கூறியுள்ளனர். இச்செவ்வாயன்று நடந்து முடிந்த போர்த்துக்கல்
ஆயர்கள் கூட்டத்தின் இறுதியில் செய்தியாளர்களிடம் பேசிய ஆயர் பேரவையின் செயலர் அருட்தந்தை
Manuel Morujao திருச்சபையின் கதவுகளும் இதயமும் எப்போதும் எல்லாருக்கும் திறந்திருக்கிறது என்பதைக்
காட்டும் வண்ணம் திருத்தந்தை எல்லாருக்கும் தம் உரைகளை வழங்குவார் என்று கூறினார்.திருத்தந்தையின்
இந்த பயணம் குறித்து கடந்த டிசம்பர் மாதம் உறுதியான தகவல்களை வத்திக்கான் வழங்கியுள்ளது.
போர்த்துக்கல் தலத் திருச்சபையும், போர்த்துக்கல் அரசும் விடுத்த அழைப்பை ஏற்று திருத்தந்தை
இந்த பயணத்தை மேற்கொள்வார் என்று செய்திக்குறிப்பு ஒன்று கூறுகிறது.