சன.14,2010 கடந்த 25 ஆண்டுகளாக இறைவன் தனக்கும் அந்தமான் மறை மாவட்டத்திற்கும் செய்து
வந்த பல நன்மைகளுக்கு நன்றி சொல்வதாகவும், மரியாவைப் போல் தன் மனதும் இறைவனை ஏற்றிப்
போற்றுகிறதெனவும் அந்தமான் Port Blair மறைமாவட்டத்தின் முதல் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்ட அலெக்ஸ்
டயஸ் கூறினார். 2009ஆம் ஆண்டு சனவரி 18ஆம் தேதி ஆரம்பமான Port Blair மறை மாவட்டத்தின் வெள்ளி விழா
கொண்டாட்டங்கள் இச்சனவரி 16,17ஆகிய நாட்களில் நிறைவு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. தனது 25 ஆண்டுகள்
ஆயர் பொறுப்பில், 2004ஆம் ஆண்டு நிகழ்ந்த சுனாமியை நினைவு கூர்ந்த ஆயர் டயஸ், சுனாமி திருச்சபையின்
பல கோவில்களையும், நிறுவனங்களையும் அழித்து விட்டபோதிலும், அவைகளை மிகத் துரிதமாக மீண்டும்
கட்டியெழுப்ப முடிந்தது இறைவனின் அருட்செயலே என்று செய்தியாளர்களிடம் கூறினார்.