கருகலைப்பைமக்களின் நலத்திட்டங்களில்இணைக்கும்பாராளுமன்ற முடிவுகளை நிறுத்தும் இறுதி முயற்சி -அமெரிக்க ஐக்கிய நாட்டின்
ஆயர்பேரவை
சன.13,2010 கருகலைப்பை மக்களின் நலத்திட்டங்களில் இணைக்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டின்
பாராளு மன்ற முடிவுகளை நிறுத்தும் இறுதி முயற்சியாக, அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஆயர் பேரவை பங்கு
தளங்களில் வாசிக்கும் வண்ணம் அறிக்கைகளை விடுத்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கத்தோலிக்கர்கள்
தொடர்ந்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து இறுதிநேர தந்திகளை அனுப்ப வேண்டும் என அந்த
அறிக்கையில் ஆயர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். பாரளுமன்றத்தினரின் இந்த முடிவு தங்களது மனசாட்சிக்கு
எதிரானதென்றும், நலத்திட்டங்கள் அனைவருடைய மனசாட்சியின் குரல்களை எதிரொலிப்பதாக இருக்கவேண்டுமெனவும் அத்தந்திகளில் எடுத்துரைக்கவேண்டுமென
ஆயர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.