2010-01-12 16:22:33

மலேசியாவில் கிறிஸ்தவத்திற்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகள் மிகுந்த கவலை தருவதாக உள்ளது- மலேசிய ஆயர்கள்


சன.12,2010 மலேசியாவில் கிறிஸ்தவத்திற்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகள் மிகுந்த கவலை தருவதாக உள்ளதாகவும் பேச்சுவார்த்தை மற்றும் இணக்க வாழ்விற்கு உழைப்பதற்கான அவசரத் தேவை உள்ளதாகவும் இத்திங்களன்று மலேசிய ஆயர்கள் அறிவித்தனர்.

ஏற்கனவே மலேசிய கத்தோலிக்க ஆயர்கள் நாட்டில் அமைதியைக் கொணரும் வழிகள் குறித்து ஆராய அந்நாட்டு அரசு அதிகாரிகளுடன் இணைந்து முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறும் வத்திக்கான் பிதேஸ் செய்தி நிறுவனம் இத்திங்களன்று மலேசியாவில் இவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ கோவில் ஒன்று தாக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வித எதிர்ப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் அரசு அதிகாரிகளுடன் ஒத்துழைப்பையும் இசுலாமியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளையும் தலத்திருச்சபை தொடர்ந்து நடத்திக் கொண்டிருப்பதாக மலேசிய ஆயர்கள் அறிவித்துள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.