2010-01-12 16:22:18

மனிதகுல பாதுகாப்பிற்கென குரல் கொடுக்க கிறிஸ்தவ அமைதி நிறுவனங்கள் அழைப்பு


சன.12,2010 ராணுவ பாதுகாப்பிற்கல்ல, மாறாக மனித குல பாதுகாப்பிற்கென இவ்வுலகில் குரல் கொடுக்க அனைத்து கிறிஸ்தவர்களும் தங்கள் வளங்களைப் பயன்படுத்த வேண்டும் என கிறிஸ்தவ அமைதி நிறுவனங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

Pax Christi மற்றும் ஒப்புரவுக்கான கூட்டமைப்பு என்ற கிறிஸ்தவ அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆயுதங்கள் மூலமே நாட்டு நலனைக் காப்பாற்றுவதுடன், பாதுகாப்பையும் பெற முடியும் என்ற பழைய எண்ணங்களை மாற்றி, ஏழைகளை மையமாகக் கொண்ட பாதுகாப்பு குறித்து திட்டமிடல் வேண்டும் என அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.

மக்களிடையேயான ஒருமைப்பாட்டை வளர்ப்பதன் மூலம், பாதுகாப்பைக் கொணர முடிவதுடன், போரின் காயங்களையும் உரிமை மீறல்களையும், ஏழ்மையையும், சுற்றுச் சூழல் அழிவையும் மாற்றி அமைக்க முடியும் எனவும் இக்கத்தோலிக்க அமைதி நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.








All the contents on this site are copyrighted ©.