இலங்கையில் வடபகுதியினை மீண்டும் கட்டியெழுப்ப 400 கோடி டாலரை ஒதுக்க உள்ளதாக அறிவித்தார்
மகிந்த ராஜபக்ஷா
சன.12,2010 இலங்கையில் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட வடபகுதியினை மீண்டும் கட்டியெழுப்ப
400 கோடி டாலரை ஒதுக்க உள்ளதாக இச்செவ்வாயன்று அறிவித்தார் அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஷா.
அரசு
மற்றும் உதவி வழங்கும் அமைப்புகளின் நிதியான இது, இவ்வாண்டில் ரயில்பாதைகள், மின்சார
உற்பத்தி, விவசாயக் கட்டுமான பணி ஆகியவைகள் அமைக்கப் பயன்படும் என்றார் அரசுத்தலைவர்.
தமிழீழ
விடுதலைப் புலிகளிடமிருந்து 2007ம் ஆண்டு கைப்பற்றிய கிழக்குப் பகுதிகளை மேம்படுத்த அடுத்த
மூன்றாண்டுகளுக்கு என ஏற்கனவே 300 கோடி ஒதுக்கியுள்ளதையும் சுட்டிக்காட்டினார் இலங்கை
அரசுத் தலைவர்.