2010-01-09 16:52:39

இந்தியா மலாவிக்கு ரூ. 253 கோடி கடனுதவி


சன.09,2010 : ஆப்பிரிக்காவின் தென் பகுதியில் உள்ள நாடான மலாவிக்கு இந்தியா 253 கோடி ரூபாய் கடனுதவி அளிக்கும் என்று, குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி அறிவித்தார்.

மூன்று ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஒரு வார சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அன்சாரி மலாவி நாட்டின் தலைநகர் லிலாங்வியில் இவ்வெள்ளிக்கிழமை இதனை அறிவித்தார்.

இந்தக் கடனுதவியில், மலாவியின் வேளாண்மை, சுகாதாரம், கல்வி மேம்பாட்டுக்கான 18.40 கோடி ரூபாய் மானியமும், பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட அந்த நாட்டு மக்களுக்கு அவசரகால நிதியுதவி 4.60 கோடி ரூபாயும் அடங்கும்.

சிறந்த கொள்கைகள், நம்பிக்கை அடிப்படையில் இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவு அமைந்துள்ளதாக அன்சாரி குறிப்பிட்டார்.

மலாவி அதிபர் பிங்கு வா முத்தாரிகா பேசுகையில், இந்தியாவால் உருவாக்கப்பட்டவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.








All the contents on this site are copyrighted ©.