சன.07,2010 ஜனவரி 3 முதல் 9 வரை அமெரிக்காவில் கத்தோலிக்கத் திருச்சபை குடியேற்றதாரர்
வாரத்தை அனுசரித்துவருகிறது. குடியேற்றதாரர் குறித்த பிரச்சனையை அமெரிக்க பாராளு மன்றம் சரியான முறையில் அணுகவும்,
குடியேற்றதாரர் குறித்த சட்டங்களை மனிதாபிமான அடிப்படையில் மறு பரிசீலனை செய்யவும் திருச்சபையின்
சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆயர் பேரவையின் குடியேற்றதாரர் ஆணையத்தின்
தலைவர் ஆயர் ஜான் வெஸ்டர் கூறியுள்ளார். இந்த குடியேற்றதாரர் வாரத்தையொட்டி, பல பங்கு
கோவில்களில் செப வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று செய்திக்குறிப்புகள் கூறுகின்றன.