இந்தியா, பாகிஸ்தான் ஊடகக் குழுவினரின் அமைதிக்கான முயற்சிக்கு பாகிஸ்தான் திருச்சபை
ஆயர் பாராட்டு
சன.05,2009 இந்தியாவின், டைம்ஸ் ஆப் இந்தியா ஊடகக் குழுவும், பாகிஸ்தானின் Jang ஊடகக்
குழுவும் இணைந்து இருநாடுகளின் அமைதிக்காக உழைக்க உறுதி எடுத்திருப்பதற்குத் தனது பாராட்டைத்
தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் திருச்சபை ஆயர் சாமுவேல் ராபர்ட் அஜாரியா.
இவ்விரு
குழுக்களும் புத்தாண்டு தினத்தன்று வெளியிட்ட அறிக்கையை வாசிக்கும் பொழுது, இந்தியாவிலும்
பாகிஸ்தானிலும் இருக்கின்ற 150 கோடிக்கு மேற்பட்ட மக்களின் வாழ்வு மீது கொண்டுள்ள கரிசனையைக்
காட்டுவதாகத் தெரிகின்றது என்று கூறினார் ஆயர் சாமுவேல்.
இது, இவ்விருநாடுகளின்
மக்களுக்கு மிகச் சிறந்த புத்தாண்டு பரிசாக இருக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ள அவர்,
இவ்விரு நாடுகளின் அரசியல் தலைவர்களும் இந்த ஊடகத் துறையினரின் முயற்சிகளுக்கு ஆதரவு
வழங்கி அப்பகுதியில் அமைதி ஏற்பட உதவுமாறு கேட்டுள்ளார்.
தான் இந்தியாவிற்கு மேற்கொள்ளவிருக்கும்
பயணத்தில், வடக்கு மற்றும் தென்னிந்திய திருச்சபைகளின் தலைவர்களிடம் பேசி அவர்கள் இவ்விரு
நாடுகளுக்கும் அமைதிப் பயணம் மேற்கொள்ளுமாறு கூறவிருப்பதாக ஆயர் தெரிவித்தார்.
The
Times of India என்ற தினத்தாள், தனது புத்தாண்டு பிரசுரத்தில், "Love Pakistan" என்று
தலைப்பிட்டு அதற்கான காரணத்தை விளக்கும் பெரிய கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது.