திருத்தந்தையைத் தள்ளிவிட்ட மனத்தளவில் பாதிக்கப்பட்ட பெண்ணை, திருத்தந்தையின் செயலர்
சந்திப்பு
சன.04,2010 கிறிஸ்துமஸ் திருவிழிப்பு நள்ளிரவு திருப்பலியின் துவக்கத்தில் திருத்தந்தையைத்
தள்ளிவிட்ட மனத்தளவில் பாதிக்கப்பட்ட பெண்ணை, திருத்தந்தையின் செயலர் பேரருட்திரு Georg
Gaenswein, சந்தித்து திருத்தந்தை அப்பெண்மீது கொண்டுள்ள கரிசனையையும் திருத்தந்தையின்
நன்மைத்தனத்தையும் தெரிவித்தார் என்று திருப்பீடம் இஞ்ஞாயிறன்று அறிவித்தது.
இத்தகவலை
நிருபர் கூட்டத்தில் வெளியிட்ட திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருட்தந்தை பெடரிக்கோ
லொம்பார்தி, அப்பெண்ணைச் சந்தித்து அவள்மீதான தமது அக்கறையைத் தெரிவிக்குமாறு திருத்தந்தை
தமது செயலரிடம் கேட்டுக் கொண்டதாகக் கூறினார்.
இப்பெண்ணின் செயலைத் திருத்தந்தை
மன்னித்துவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
25 வயதாகும் Susanna Maiolo என்ற அப்பெண்,
உரோமைக்கு அருகிலுள்ள சுபியாக்கோவில் உளவியல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இப்பெண், இத்தாலிய மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளின் குடியுரிமையைப் பெற்றிருப்பவர்
ஆவார்.