டிச.27, இன்றைய புனிதர்: அப்போஸ்தலரும், நற்செய்தியாளருமானபுனித யோவான்
புனித யோவானும், புனித யாக்கோபும் செபதேயுவின் மக்கள். இயேசுவால் அதிகம் அன்பு செய்யப்பட்டவர்
புனித யோவான் என்று பரம்பரை கூறுகிறது. இயேசுவின் உருமாற்றம் உட்பட ஒரு சில சிறப்பான
நிகழ்வுகளில் பங்கேற்ற பெருமை யோவானுக்கு உண்டு. யோவான் நற்செய்தியையும், இரு திருமுகங்களையும்
இவர் எழுதியதாக சொல்லப்படுகிறது. இவர் அதிக ஆண்டுகள் வாழ்ந்து, அப்போஸ்தலர்களிலேயே இறுதியாக
இறந்தார் எனச் சொல்லப்படுகிறது.