2009-12-23 15:29:59

வங்க மொழியை ஐ. நாவின் அதிகாரப்பூர்வ மொழியாக்கக் கோரிக்கை


டிச.23,2009 வங்க மொழி ஐ.நா.வின் அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாக சேர்க்கப்பட வேண்டும் என்று பங்களாதேஷ் அரசு கோரியுள்ளதை ஆதரித்து ஒரு தீர்மானத்தை மேற்கு வங்க சட்டப் பேரவை நிறைவேற்றியுள்ளதென செய்திகள் கூறுகின்றன.
இந்த கோரிக்கையை ஐ நா வுக்கு இந்திய மத்தியஅரசு அனுப்ப வேண்டும் என்று மேற்கு வங்க அரசு கேட்டுக் கொண்டுள்ளது எனவும், செப்டம்பர் மாதம் ஐ நாவின் பொதுச் சபையில் பேசுகையில் வங்க மொழியை ஐ நாவின் அதிகாரப்பூர்வ மொழியாக்க வேண்டும் என்று பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா வேண்டுகோள் விடுத்திருந்தார் எனவும் செய்திகள் மேலும் கூறுகின்றன.







All the contents on this site are copyrighted ©.