அக்காலத்தில் மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார்.40
அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார்.41 மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து
கேட்டபொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால்
முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார்.42 அப்போது அவர் உரத்த குரலில், ' பெண்களுக்குள் நீர் ஆசி
பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே!43 என் ஆண்டவரின் தாய் என்னிடம்
வர நான் யார்?44 உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால்
துள்ளிற்று.45 ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர் '
என்றார்