டிச.12,2009 திருப்பீடத்திற்கும் இஸ்ராயேலுக்கும் இடையே இவ்வியழானன்று இடம் பெற்ற பேச்சுவார்த்தைகள் ஒருவர் ஒருவரைப்
புரிந்துகொள்ளும் படியானதாகவும், நட்புணர்விலும் இடம் பெற்றதாக இருதரப்பினரும் வெளியிட்ட அறிக்கை
கூறுகிறது. வரும் மாதம் 7ஆம் தேதி இவ்விருதரப்பினரும் மீண்டும் கூடி விவாதிக்க உள்ளதற்கு
இசைவு அளித்திருப்பதே நல்ல முன்னேற்ற நடவடிக்கை என செய்தி நிறுவனங்கள் உரைக்கின்றன. கத்தோலிக்கத்
திருச்சபை நிறுவனங்கள் மீது இஸ்ராயேலில் விதிக்கப்பட்டுள்ள வரிகள் மற்றும் அங்குள்ள 100க்கும் மேற்பட்ட திருச்சபை
உடமைகள் மீதான உரிமை போன்றவை குறித்து தற்போது பேச்சுவார்த்தைகள் இடம் பெற்று வருகின்றன.1993ஆம்
ஆண்டின் அரசியல் ஒப்பந்தத்தின் வழி திருப்பீடத்திற்கும், இஸ்ராயேலுக்கும் இடையே அரசியல்
உறவு உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து, இப்பேச்சுவார்த்தைகள் இரு தரப்பினரிடையே தொடர்ந்து வருகின்றன.