2009-12-12 15:59:03

அயர்லாந்தின் திருச்சபைத் தலைவர்களோடு பேச்சவார்த்தைகளை நடத்தினார் திருத்தந்தை 


டிச.12,2009 அயர்லாந்தின் டப்ளின் பெருமறைமாவட்டத்தின் இன்றைய பிரச்சனைகள் குறித்து அந்நாட்டு திருச்சபைத் தலைவர்களோடும், திருப்பீட அதிகாரிகளோடும் பேச்சவார்த்தைகளை நடத்தினார் திருத்தந்தை 16 ஆம் பெனெடிக்ட். டப்ளின் மறைமாவட்டம் தயாரித்த உண்மை கண்டறியும் ஆய்வறிக்கைப் பற்றி தன் கருத்துக்களை முன் வைத்த பாப்பிறை, அயர்லாந்தின் சில குருக்களின் தவறான பாலின நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டக் குடும்பங்களுக்குத் தன் ஆழமான வருத்தத்தைத் தெரிவிப்பதாகவும், சில குருக்களின் இத்தகைய நடவடிக்கைகள் குறித்து அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் கூறினார். இத்தகைய சூழ்நிலையில் திருச்சபையின் பதிலுரை மற்றும் அது எடுக்க உள்ள நடவடிக்கைகள் குறித்து தெளிவான ஒரு மேய்ப்புப்பணி சுற்றறிக்கையை அயர்லாந்து கத்தொலிக்கர்களுக்கென திருத்தந்தை வெளியிட உள்ளதாகவும் திருபீடம் அறிவித்துள்ளது.







All the contents on this site are copyrighted ©.