2009-12-12 16:00:55

Kenyaவில் அயர்லாந்து குரு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்


டிச.12,2009 Kenyaவின் Kericho மறைமாவட்டத்தில் கடந்த 41 ஆண்டுகளாக வளர்ச்சித் திட்டங்களில் பணியாற்றி வந்த அயர்லாந்து குரு ஒருவர் இவ்வெள்ளியன்று கொலை செய்யப்பட்டுள்ளார்.
68 வயது நிரம்பிய அயர்லாந்து குரு Jeremiah Rocheன் உடைமைகளைத் திருட முயன்றவர்கள் இக்கொலையைச் செய்துள்ளனர் எனக் காவல் துறை அறிவித்துள்ளது.
அண்மைக்காலங்களில் Kenya வில் குருக்கள் தாக்கப்படுவது குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்ட அந்நாட்டு ஆயர் Emmanuel Okombo, இததகைய வன்முறைகள் மீண்டும் இடம் பெறாவண்ணம் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட  வேண்டுமென அரசை விண்ணப்பித்துள்ளார். இதற்கிடையே, குரு Roche ன் அகால மரணம் குறித்து ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிடும் இரங்கல் தந்தியை அவர் சார்ந்திருக்கும் புனித Patrick மறைபோதகசபைக்கும், அவரின் உறவினர்களுக்கும் அனுப்பியுள்ளார் அயர்லாந்து அரசுத்தலைவர் Mary McAleese.







All the contents on this site are copyrighted ©.