அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்துக்குக் கூறியது- இத்தலைமுறையினரை யாருக்கு ஒப்பிடுவேன்?
இவர்கள் சந்தை வெளியில் உட்கார்ந்து மறு அணியினரைக் கூப்பிட்டு ' நாங்கள் குழல் ஊதினோம்;
நீங்கள் கூத்தாடவில்லை.17 நாங்கள் ஒப்பாரி வைத்தோம்; நீங்கள் மாரடித்துப் புலம்பவில்லை
' என்று கூறி விளையாடும் சிறுபிள்ளைகளுக்கு ஒப்பானவர்கள்.18 எப்படியெனில் யோவான் வந்தபோது
அவர் உண்ணவுமில்லைகுடிக்கவுமில்லை. இவர்களோ ' அவன் பேய்பிடித்தவன் ' என்கிறார்கள்.19
மானிட மகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார்; குடிக்கிறார். இவர்களோ ' இம் மனிதன் பெருந்தீனிக்காரன்
குடிகாரன் வரி தண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன் ' என்கிறார்கள். எனினும் ஞானம்
மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக் கொண்டோரின் செயல்களே சான்று.