2009-11-27 15:20:29

மதச் சார்பற்ற வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்க ஜார்கண்ட் மாநில கிறிஸ்தவத் தலைவர்கள் வலியுறுத்தல்


நவ.27,2009 இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் இவ்வியாழனன்று தொடங்கியுள்ள மாநிலப் பொதுத் தேர்தல்களில் அனைத்து குடிமக்களும் தங்களின் ஓட்டுரிமையை செயல்படுத்தவும் மதச் சார்பற்ற வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கவும் வேண்டுமென்று அம்மாநில கிறிஸ்தவத் தலைவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஜார்கண்ட் மாநிலத்தின் கத்தோலிக்கர் உட்பட அனைத்து கிறிஸ்தவ சபையினரும் நடத்திய கூட்டத்தில் இவ்வாறு அழைப்புவிடுத்தனர்.

சிறுபான்மை மதத்தவர், இந்தியாவின் ஓர் அங்கம் என்பதை நினைவுபடுத்திய கிறிஸ்தவத் தலைவர்கள், இந்த உண்மையை அங்கீகரிக்கும் அரசியல் கட்சிகளுக்குக் கிறிஸ்தவர்கள் ஓட்டுப் போடுமாறு வலியுறுத்தியுள்ளனர்.

நவம்பர் 25 ம் தேதி தொடங்கியுள்ள இப்பொதுத் தேர்தல்கள், வருகிற டிசம்பர் 18ம் தேதி நிறைவடையும். டிசம்பர் 23ம் தேதி ஓட்டுகள் எண்ணப்படும்.

ஜார்கண்ட் மாநிலப் பொதுத் தேர்தல்களில் 194 சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட சுமார் 470 பேர் போட்டியிடுகின்றனர். ஏறத்தாழ நாற்பதாயிரம் பேர் பாதுகாப்புப்பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்







All the contents on this site are copyrighted ©.