உலக AIDSதினத்தின்போதுகுழந்தைகள்
பற்றி சிறப்பாகநினைவுகூரப்படும் - கர்தினால் மரடியாகா
நவ.25,2009 தகுந்த மருத்துவ உதவிகள் இல்லாத காரணத்தாலும், AIDS நோய் நாட்டில் அதிகம்
பரவியுள்ளதெனும் காரணத்தாலும் எந்த ஒரு குழந்தையும் இந்நோயினால் துன்புறக்கூடாதென கர்தினால் ஆஸ்கர் ரோத்ரிகுவேஸ் மரடியாகா (Oscar Rodriguez
Maradiaga) கூறினார். வரும் டிசம்பர் முதல் தேதியன்று நினைவுகூரப்படும் உலக AIDS தினம்
குறித்து செய்தித்தாளொன்றுக்குப் பேட்டியளித்த அகில உலக காரித்தாஸ் நிறுவனத்தின் தலைவரான
கர்தினால் மரடியாகா இவ்வாறு கூறினார். "மனித உரிமைகளும் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கவும்"
என்ற கருத்தில் இந்த ஆண்டு டிசம்பர் முதல் தேதி கொண்டாடப்படும் உலக AIDS தினத்தின் போது உலகில் AIDS
நோயினால் இறக்கும் குழந்தைகள் பற்றி சிறப்பாக நினைவுகூரப்படும் என்றுரைத்தார் கர்தினால்
மரடியாகா. உலகின் எல்லா அரசுகளும், மருத்துவ துறையில் உள்ள பன்னாட்டு நிரவனங்களும் AIDS நோயினால்
பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளைப் பரிசோதிக்கவும், அவர்களுக்குரிய மருத்துவ உதவிகள் செய்வதிலும் எந்தத்
தாமதமும் இல்லாமல் செயல்பட வேண்டுமென கர்தினால் மரடியாகா வேண்டுகோள் விடுத்தார்.