2009-11-24 15:46:22

பழங்குடியினரிடையே நற்செய்தி அறிவிப்புப்பணி குறித்து குவஹாத்தி பேராயர்


நவ.24,2009 இந்தியாவில் பழங்குடியினத்தவரைப் புரிந்துகொண்டு, அவர்களின் கலாச்சார பாரம்பரியத்திற்கு ஊறு விளைவிக்காமல், புதிய நற்செய்தி அறிவிப்பு வழிகள் குறித்து ஆராய வேண்டியது மறைபோதகர்களின் முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும் என அழைப்பு விதுத்துள்ளார் பேராயர் Thomas Menamparambil.

வட இந்தியாவில் பழங்குடியினரிடையே பணியாற்றும்போது எதிர் நோக்கப்படும் சவால்கள் குறித்து கொல்கொத்தாவில் தலத் திருச்சபை அதிகாரிகளுடன் இடம் பெற்ற கலந்துரையாடலில் உரையாற்றிய குவஹாத்தி பேராயர் Menamparambil பழங்குடி இனத்தவர் தங்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை இழக்காமலேயே கிறிஸ்துவிடம் நெருங்கி வர நாம் ஒவ்வொருவரும் உதவ வேண்டும் என்றார். 








All the contents on this site are copyrighted ©.