திருத்தந்தையுடன் தான் நடத்திய சந்திப்பு தான் எதிர்பார்த்தபடியே சிறப்புடன் இருந்தது,
பேராயர் வில்லியம்ஸ்
நவ.23,2009 திருத்தந்தையுடன் சனிக்கிழமை தான் நடத்திய சந்திப்பு தான் எதிர்பார்த்தபடியே
சிறப்புடன் இருந்ததாகவும் இச்சந்திப்பு குறித்து தான் மகிழ்வதாகவும் இங்கிலாந்து ஆங்கிலிக்கன்
கிறிஸ்தவ சபைத் தலைவர் பேராயர் ரோவன் வில்லியம்ஸ் தெரிவித்தார்.
திருத்தந்தையை
சந்தித்தபின் இலண்டனுக்குத் திரும்புமுன் உரோம் நகரில் பிபிசி செய்தி நிறுவனத்திற்கு
பேட்டியளித்த பேராயர் வில்லியம்ஸ், ஆங்கிலிக்கன் சபையிலிருந்து கத்தோலிக்கத் திருச்சபைக்குள்
இணைய விரும்புவோர் குறித்த ஏடு வெளியிடப்பட்டது குறித்தத் தன் அக்கறைகளைத் திருத்தந்தையிடம்
வெளியிட்டதாகவும் இரு சபைகளுக்கும் இடையேயான உறவு குறித்த பேச்சுவார்த்தைகள் தொடரும்
என்ற திருத்தந்தையின் பதில் குறித்து தான் மகிழ்வதாகவும் தெரிவித்தார்.
தான்
திருத்தந்தையுடன் இருசபைகளுக்கிடையேயான உறவு குறித்து பேசிய போது ஒத்துழைப்பின் மேலும்
பல நற்கூறுகளைக் காண முடிந்தது என்றார் இங்கிலாந்து கிறிஸ்தவ சபைத் தலைவர்