நவ.20,2009 சுரினாம் அரசுத்தலைவர் ருனால்டோ ரொனால்டு வெநெசியன் இவ்வெள்ளியன்று திருத்தந்தையை
திருப்பீடத்தில் சந்தித்தார். திருத்தந்தையைச் சந்தித்த பின்னர் திருப்பீடச் செயலர்
கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, திருப்பீட நாடுகளுக்கிடையேயான உறவுகள் துறையின் செயலர்
பேராயர் தொமினிக் மாம்பெர்த்தி ஆகியோரையும் சுரினாம் அரசுத்தலைவர் சந்தித்தார். சுரினாமின்
அரசியல் சமூக நிலவரம், சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு அந்நாடு எடுக்கும் முயற்சிகள்,
திருச்சபைக்கும் அரசுக்குமிடையேயான உறவுகள் போன்ற விவகாரங்கள் இச்சந்திப்புக்களில் இடம்
பெற்றன.தென் அமெரிக்காவின் வட பகுதி நாடான சுரினாமின் மொத்த மக்கட் தொகை சுமார் 4 இலட்சத்து
70 ஆயிரம். இந்நாட்டின் நாந்கில் ஒரு பகுதியினர் ஒரு நாளைக்கு 2 டாலருக்கு குறைவான ஊதியத்தில்
வாழ்கின்றனர்.