நவ.20,2009 வத்திக்கானின் சிஸ்டின் சிற்றாலயத்தைப் பார்வையிடும் போது, கையில் binoculars களுக்குப்
பதிலாக பைபிளைச் சுமந்து செல்வது நலம் பயக்குமென வத்திக்கான் அருங்காட்சியக அலுவலரில் ஒருவரான அருட்திரு
Roberto Zagnoli கூறியுள்ளார். "வண்ணங்களால் தீட்டப்பட்ட வார்த்தை" (The Painted Word )
என்ற தலைப்பில் நான்கு பாகங்களாக எழுதப்பட்டுள்ள விளக்கப் புத்தகங்களின் ஆசிரியரான அருட்தந்தை Zagnoli இப்புத்தகங்களின்
முதல் பகுதி இச்செவ்வாயன்று வெளியிட்டபோது இவ்வாறு கூறினார். மிக்கேலாஞ்சலோவின் கலைத்திறனால்
உருவான சிஸ்டின் சிற்றாலயம் கண்ணுக்கும், ஆன்மாவுக்கும் விருந்து படைக்கிறது என்று இப்புத்தகத்தை
வெளியிட்ட கர்தினால் ஜியோவான்னி லயோலா கூறினார். இப்புத்தகங்களின் ஆங்கிலப் பதிப்பு வரும்
டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என செய்திக்குறிப்பு ஒன்று கூறுகிறது.