நவம்பர் 18 - புனிதபேதுரு, பவுல்பஸிலிக்கா
பேராலயஅர்ச்சிப்பு
வத்திக்கான் குன்றின் அடிவாரத்தில் கி.பி. 83ஆம் ஆண்டு திருத்தந்தை புனித அனக்ளீட்டஸ்
என்பவரால் எழுப்பப்பட்டது புனித பேதுருவின் ஆலயம். இன்று உலகப்புகழ் பெற்றதாய் விளங்கும்
இந்த பஸிலிக்கா பேராலயம் 1506இல் இரண்டாம் ஜூலியஸ் என்ற திருத்தந்தையால் ஆரம்பிக்கப்பட்டு, 1626ஆம்
ஆண்டு எட்டாம் உர்பான் என்பவரால் கட்டி முடிக்கப்பட்டது. இந்தப் பேராலயத்தில் புனித பேதுருவின்
திருப்பண்டங்கள் இன்றுவரை புனிதமாகப் பாதுகாக்கப்படுகின்றன. 103ஆம் ஆண்டு திருத்தந்தை
அனக்ளீட்டஸ் என்பவரால் எழுப்பப்பட்டது புனித பவுல் ஆலயம். பல்வேறு வேதக் கலகங்களில் அழிவுக்குள்ளாகி மீண்டும் மீண்டும்
கட்டப்பட்ட இந்த பஸிலிக்கா பேராலயம் 1854ஆம் ஆண்டு ஒன்பதாம் பத்திநாதர் என்ற திருத்தந்தையால்
கட்டி முடிக்கப்பட்டு, அர்ச்சிக்கப்பட்டது.