செவித் திறன் இழந்தோருக்கான சர்வதேச கருத்தரங்கு குறித்து பேராயர் சிக்மன்ட் சிமௌஸ்கி,
பத்திரிக்கையாளர் சந்திப்பு
நவ.17,2009 இம்மாதம் 20 மற்றும் 21 தேதிகளில் வத்திக்கானில் இடம்பெறவுள்ள செவித் திறன்
இழந்தோருக்கான சர்வதேச கருத்தரங்கு குறித்து இச்செவ்வாயன்று திருப்பீட பத்திரிகை அலுவலகத்தில்
பத்திரிக்கையாளர் சந்திப்பு இடம் பெற்றது.
நலப்பணிகளுக்கான திருப்பீட மேய்ப்புப்பணி
அவையின் தலைவர் பேராயர் சிக்மன்ட் சிமௌஸ்கி செவித்திறன் இழந்தோரின் இன்றைய நிலை மற்றும்
அவர்களுக்கான திருச்சபையின் பணி குறித்து விளக்கினார்.
இத்திருப்பீட அவையின்
கூற்றுப்படி, இன்று உலகில் செவித் திறன் பாதிக்கப்பட்டோர் 27 கோடியே 80 லட்சம் பேர்,
அதில் 5 கோடியே 90 லட்சம் பேர் முற்றிலுமாக செவித்திறன் இழந்தோராவர்.