செர்பிய ஆர்த்தடாக்ஸ் பிதாப்பிதா பாவ்லேயின் மரணம் குறித்து இரங்கல் தந்தி. - கர்தினால்
வால்டர் கஸ்பர்
நவ.17,2009 செர்பிய ஆர்த்தடாக்ஸ் பிதாப்பிதா பாவ்லேயின் மரணம் குறித்து தன் ஆழ்ந்த அனுதாபங்களை
வெளியிட்டு இரங்கல் தந்தியை அனுப்பியுள்ளார், கர்தினால் வால்டர் கஸ்பர்.
கிறிஸ்தவ
ஒன்றிப்பிற்கான திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் கஸ்பர், செர்பிய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ
சபையின் Cetinje பேராயர் Amfilohije க்கு அனுப்பியுள்ள இரங்கல் தந்தியில், பிதாப்பிதா
பாவ்லேயின் மரணம் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகவும், அவரின் பிரிவால் துயருறும்
ஆர்த்தடாக்ஸ் விசுவாசிகளுடன் தன் ஒருமைப்பாட்டைத் தெரிவிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
மரணமடைந்துள்ள செர்பிய ஆர்த்தடாக்ஸ் பிதாப்பிதா பாவ்லே கிறிஸ்தவர்களுக்கிடையேயான ஐக்கியத்திற்குக்
காட்டிய அதே ஆர்வம் மேலும் தொடரப்படும் என்ற நம்பிக்கையையும் தன் தந்திச் செய்தியில் வெளிப்படுத்தியுள்ளார் கர்தினால்
கஸ்பர்.