Cor Unum பணியாளர்கள் கிறிஸ்துவுக்குச் சாட்சியாக இருக்க வேண்டும்
நவ.17,2009 திருச்சபையின் பிறரன்புப் பணிகள் அதன் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு முக்கியத்துவம்
கொடுத்து வந்த நிலையில் தற்போது, பிறரன்புப் பணியில் ஈடுபடுவோரின் மனிதாபிமான மற்றும்
ஆன்மீக தரத்தை மேம்படுத்துவதிலும் முழுக் கவனம் செலுத்த உள்ளதாக அறிவித்தார் கர்தினால்
பால் ஜோசெப் கொர்தேஸ்.
திருப்பீடத்தின் பிறரன்பு பணிகளுக்கான Cor Unum அவையின்
தலைவர் கர்தினால் கொர்தேஸ், பிறரன்பு பணிகளின் வழி கிறிஸ்துவுக்குச் சாட்சியாக இருப்பதற்கு,
முதலில் கிறிஸ்துவை சந்தித்தவர்களாக அப்பணியாளர்கள் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
அண்மையில் நிறைவுற்ற Cor Unum அவையின்
மூன்று நாள் கருத்தரங்கின் இறுதியில் வெளியிடப்பட்ட ஏடு, கத்தோலிக்கப் பிறரன்பு பணியாளர்கள்
அனைவருக்கும் அவ்வப்போது தொடர்ந்து கிறிஸ்தவ மதிப்பீடுகளில் பயிற்சி வழங்க வேண்டியதன்
அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.