2009-11-16 17:17:42

படைப்புகளுக்கு எல்லை உண்டு, அது கடந்து போகும், ஆனால் கடவுளின் வார்த்தை என்றென்றும் நிலைத்திருக்கும், திருத்தந்தை


நவ.16,2009 படைப்புகளுக்கு எல்லை உண்டு மற்றும் அது கடந்து போகும், ஆனால் கடவுளின் வார்த்தை என்றென்றும் நிலைத்திருக்கும், அது நம்மை நித்திய வாழ்வுக்கு இட்டுச் செல்லும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் ஞாயிறு நண்பகலில் கூடியிருந்த ஆயிரக்கணக்கானத் திருப்பயணிகளுக்கு மூவேலை செப உரை வழங்கிய திருத்தந்தை, விண்ணும் மண்ணும் ஒழிந்து போகும், கடவுளின் வார்த்தைகள் ஒழியா என்ற இயேசுவின் திருவசனத்தை மையப்படுத்தி தமது சிந்தனைகளை வழங்கினார்.

இறைவார்த்தை, இவ்வுலகை மாற்றி இறையரசுக்கு நம்மைத் திறந்த உள்ளம் உடையவர்களாக மாற்றும் வித்து என்றும் அவர் கூறினார்.

இறைவார்த்தையைக் கேட்பவர்கள், அதைப் பெற்று அதன்மூலம் மிகுந்த பலன் கொடுப்பார்கள், இவர்கள் இறையாட்சியின் ஓர் அங்கம் என்றும் திருத்தந்தை கூறினார்.

இறைவார்த்தைக்கு முழுவதும் அமைந்த மனத்தோடு அதனை ஏற்ற அன்னை கன்னி மரியா, கிறிஸ்துவின் திருச்சிலுவையின் பாதையை நாம் பின்பற்றுவதற்கு நமக்கு உதவுவாளாக என்றும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்







All the contents on this site are copyrighted ©.