2009-11-16 17:36:02

Baruipur மறைமாவட்டப் பேராலயத்தின் இணை பாதுகாவலியாக முத்திபேறு பெற்ற அன்னை தெரசா 


நவ.16,2009 மேற்கு வங்கத்தின் Baruipur மறைமாவட்டப் பேராலயத்தின் இணை பாதுகாவலியாக முத்திபேறு பெற்ற அன்னை தெரசா அறிவிக்கப்பட்டுள்ளார்.

உலகத்திலேயே ஒரு பேராலயத்திற்கு அன்னை தெரசாவை இணைபாதுகாவலியாக அறிவித்திருப்பது இதுவே முதன் முறையாகும் என்றார்  Baruipur மறைமாவட்ட ஆயர் சால்வடோர் லோபோ.

இப்பேராலயத்தை ஆசிர்வதித்த கொல்கத்தா பேராயர் லூக்காஸ் சிகார் திருநிலை படுத்திய விழாவில் அன்னை தெரசாவின் பிறரன்பு சகோதரிகள் சபைத் தலைவி அருட்கன்னிகை பிரேமாவும் கலந்து கொண்டார்.

அன்னை மரியைப் பாதுகாவலியாகவும், அன்னை தெரசாவை இணை பாதுகாவலியாகவும் கொண்டுள்ள Baruipur மறைமாவட்ட பேராலயத்தினுள் முத்திபேறு பெற்ற அன்னை தெரசாவின் சிறு திரு உருவச்சிலை ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது.

 








All the contents on this site are copyrighted ©.