போலந்து நாட்டில் உயர்குலத்தில் பிறந்த ஸ்தனிஸ்லாஸ், ஒருமுறை, நற்சாவுக்குப் பாதுகாவலியான
புனித பார்பராவையும் 2 வானதூதர்களையும் காட்சியில் கண்டார். பிறிதொரு நாளில் இவருக்கு
அன்னைமரியா குழந்தை இயேசுவுடன் காட்சி கொடுத்து இவரை இயேசு சபையில் சேருமாறும் கூறிவிட்டு
மறைந்தாள். ஆனால் இவர் துறவறத்தில் சேருவதற்கு இவரது தந்தை மறுத்துவிட்டார். எனவே இவர்,
தனது 17ம் வயதில் சாக்குத் துணியைத் தம்மீது போட்டுக் கொண்டு கால்நடையாக உரோம் வந்து
இயேசு சபையில் சேர்ந்தார். அச்சபையில் ஒன்பது மாதங்களே வாழ்ந்த ஸ்தனிஸ்லாஸ், இளம் துறவுநிலையில்
கடும் நோயினால் தாக்கப்பட்டு இறந்தார்