அக்காலத்தில் இயேசு தம் சீடருக்குக் கூறியது: நோவாவின் காலத்தில் நடந்ததுபோலவே மானிட
மகனுடைய காலத்திலும் நடக்கும். நோவா பேழைக்குள் சென்ற நாள்வரை எல்லாரும் திருமணம் செய்து
கொண்டும் உண்டும் குடித்தும் வந்தார்கள். வெள்ளப்பெருக்கு வந்து அவர்கள் அனைவரையும் அழித்தது.
அவ்வாறே லோத்தின் காலத்திலும் நடந்தது. மக்கள் உண்டார்கள் குடித்தார்கள்; வாங்கினார்கள்
விற்றார்கள்; நட்டார்கள் கட்டினார்கள். லோத்து சோதோமை விட்டுப்போன நாளில் விண்ணிலிருந்து
பெய்த தீயும் கந்தகமும் எல்லாரையும் அழித்தன. மானிடமகன் வெளிப்படும் நாளிலும் அப்படியே
நடக்கும். ' அந்நாளில் வீட்டின் மேல் தளத்தில் இருப்பவர் வீட்டிலுள்ள தம் பொருள்களை எடுக்கக்
கீழே இறங்க வேண்டாம். அதுபோலவே வயலில் இருப்பவர் திரும்பி வரவேண்டாம். லோத்தின் மனைவியை
நினைத்துக் கொள்ளுங்கள். தம் உயிரைக் காக்க வழிதேடுவோர் அதை இழந்துவிடுவர்; தம் உயிரை
இழப்பவரோ அதைக் காத்துக் கொள்வர். நான் உங்களுக்குச் சொல்கிறேன்: அந்த இரவில் ஒரே கட்டிலில்
இருவர் படுத்திருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டு விடப்படுவார்.
இருவர் சேர்ந்து மாவரைத்துக்கொண்டிருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர்
விட்டுவிடப்படுவார். அவர்கள் இயேசுவைப் பார்த்து' ஆண்டவரே இது எங்கே நிகழும்? ' என்று
கேட்டார்கள். அவர் அவர்களிடம் ' பிணம் எங்கே இருக்கிறதோ அங்கேயே கழுகுகளும் வந்து கூடும்
' என்றார்