கிறிஸ்துவை அறியாத ஒரு குடும்பத்தில் பிறந்த மார்டின், 15வது வயதில் கட்டாயமாகப் படையில் சேர்க்கப்பட்டார்.
ஏமியன்ஸ் நகரில் இவர் வாழ்ந்த போது நகர் வாயிலருகே, கடும் குளிரில் வாடிய ஒரு ஏழையைக்
கண்டு, தான் உடுத்தியிருந்த கம்பளிப் போர்வையில் பாதியைக் கிழித்து அந்த ஏழைக்குப் போர்த்தினார். அன்றிரவு,
இயேசு அவர் கிழித்துத் தந்த பாதி போர்வையை அணிந்தவராய், இவருக்குத் தோன்றினார். அதன்
பின் திருமுழுக்கு பெற்ற மார்டின், தன் வாழ்வைக் கடினமான துறவு வழியில் செலவிட்டார். அவரது விருப்பத்திற்கு மாறாக
55வது வயதில் துவர்ஸ் மறைமாவட்ட ஆயராகத் திருநிலை பெற்றார். 397ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம்
நாள் இறையடி சேர்ந்தார். மறை சாட்சியாகாமலேயே, மேலைநாட்டுத் திருச்சபையில் புனிதராகக்
கொண்டாடப்பட்ட முதல் மனிதர், புனித மார்டின்.