2009-11-10 15:26:37

கடந்தகாலத் தீமைகளின் நினைவு, வருங்காலத்தில் தீமைகளை விலக்கி நடக்க உதவும், லொசர்வாத்தோரே ரொமானோ


நவ.10,2009 கடந்தகாலத் தீமைகளின் நினைவு, வருங்காலத்தில் தீமைகளை விலக்கி நடக்க உதவும் என்று தனது நம்பிக்கையை தெரிவித்தது திருப்பீட சார்பு தினத்தாள் லொசர்வாத்தோரே ரொமானோ.

ஜெர்மனியின் பெர்லின் சுவர் வீழ்ந்ததன் இருபதாம் ஆண்டு நிறைவையொட்டி கட்டுரை வெளியிட்டுள்ள அத்தினத்தாள், இத்திங்களன்று பெர்லினிலில் நடைபெற்ற விழா பற்றிப் பேசியுள்ளது.

இப்போது, ஜெர்மானியர்கள் உண்மையிலேயே ஒரு நல்ல மகிழ்ச்சியான விழாவைக் கொண்டாட அவர்களால் முடிந்துள்ளது என்றுரைக்கும் அத்தினத்தாள், 20ம் நூற்றாண்டில் பெர்லின் நகரம், நாசிசம் மற்றும் கம்யூனிசத்தின் கொடுமைகளை அனுபவித்துள்ளது என்று கூறியது.

பெர்லின் சுவர் வீழ்ந்தது, சுதந்திரத்திற்குத் தடையாய் இருப்பதன் அசாதரண அடையாளமாக இருக்கின்றது என்று லொசர்வாத்தோரே ரொமானோ குறிப்பிட்டது.

1989ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி இரவு பெர்லின் சுவர் இடிப்புத் தொடங்கியது







All the contents on this site are copyrighted ©.