2009-11-07 13:38:10

நவ. 08 - புனித காட்ப்ரி (Godfrey)


1050ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் பிறந்த இவர் தன் சிறு வயதிலேயே தாயை இழந்தார். இவரது தந்தை இவரை 5 வயது சிறுவனாக துறவு மடத்தவர்களிடம் ஒப்படைத்தார். 25வது வயதில் குருவாகத் திருநிலைபடுத்தப்பட்ட காட்ப்ரி விரைவில் துறவுமடத் தலைவரானார். இவரது விருப்பத்திற்கு மாறாக, 1103ஆம் ஆண்டு ஏமியன்ஸ் (Amiens) மறைமாவட்ட ஆயராக நியமிக்கப்பட்டார். காலணிகள் அணியாமல், பாவப்பரிகாரம் செய்வதற்கு பாதயாத்திரை செல்லும் ஒரு பயணியைப் போல் இவர் ஏமியன்ஸ் நகரில் நுழைந்து, ஆயர் பொறுபேற்றார். ஆயர் இல்லத்தில் வெகு எளிய வாழ்வைப் பின்பற்றினார். இயேசுவின் இறுதி இரவுணவை நினைவுகூரும் வகையில், இவர் தினமும் ஆயர் இல்லத்தில் 13 ஏழைகளுடன் உணவருந்தினார். ஏழைகள், தொழு நோயாளிகள் ஆகியோருக்கு பணி செய்வதில் தன் வாழ்வைக் கழித்தார். 1115ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி இறையடி சேர்ந்தார்.







All the contents on this site are copyrighted ©.