2009-11-07 14:55:15

கடந்த ஆண்டில் குருத்துவத்திற்கான இறையழைத்தல்கள் உலகின் இருபது நாடுகளில் அதிகரித்துள்ளது, குருத்துவ அழைத்தலுக்கான பாப்பிறை மேய்ப்புப்பணி இயக்குனர்


நவ.07,2009 கடந்த ஆண்டில் குருத்துவத்திற்கான இறையழைத்தல்கள் உலகின் இருபது நாடுகளில் அதிகரித்திருப்பதாக, குருத்துவ அழைத்தலுக்கான பாப்பிறை மேய்ப்புப்பணி இயக்குனர் பேரருட்திரு பிரான்சிஸ் பொன்னிச்சி (Francis Bonnici) தெரிவித்தார்.

பிரிட்டன் இறையழைத்தல் இயக்குனர்களுக்கென உரோமையில் நடைபெற்ற கருத்தரங்கில் இதனை அறிவித்த பேரருட்திரு பொன்னிச்சி, இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் குருத்துவத்திற்கான இறையழைத்தல்கள் அதிகரித்துள்ளன என்றார்.

வத்திக்கானில் 2011ம் ஆண்டில் வெளியிடப்படுவதாய்த் திட்டமிடப்பட்டுள்ள புதிய ஏட்டில் திருப்பணி குருத்துவம் பற்றி அதிகம் வலியுறுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர்கள் பேரவை கடந்த செப்டம்பரில் வெளியிட்ட அறிக்கையின்படி, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் மறைமாவட்டங்களில் நாற்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் குருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.

 








All the contents on this site are copyrighted ©.