லியோன் மறைமாவட்ட குருக்கள் தங்களது ஒருமாத வருமானத்தை ஏழைகளுக்கு உதவுவதற்கு வழங்க முன்வந்துள்ளனர்
நவ.06,2009 ஸ்பெயின் நாட்டுக் குருக்கள் செய்து வரும் பிறரன்புப் பணிகளைப் பின்பற்றி
பிரான்ஸ் நாட்டின் லியோன் மறைமாவட்ட குருக்கள் தங்களது ஒருமாத வருமானத்தை ஏழைகளுக்கு
உதவுவதற்கென வழங்க முன்வந்துள்ளனர்.
லியோன் மறைமாவட்ட குருக்கள் ஆணையம் விடுத்த
அழைப்பிற்கிணங்கி, அம்மறைமாவட்ட குருக்கள், தங்களின் ஒருமாத ஊதியமான சுமார் 1340 யூரோக்களைத்,
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குக் கொடுத்துள்ளனர்.
தனிப்பட்ட
விதத்திலும் வெளியே தெரியாமல் பல குருக்கள் ஏற்கனவே ஏழைகளுக்கு உதவி வருகின்ற போதிலும்
மறைமாவட்டமாக இணைந்து இப்பிறரன்புச் செயலைச் செய்ய விரும்பியதாக லியோன் மறைமாவட்ட குருக்கள்
ஆணையம் அறிவித்தது.
புனித வாரத்தில் பல ஸ்பானிய மறைமாவட்ட ஆயர்கள், தங்கள் குருக்களிடம்
ஏழைகளுக்கென, அவர்களின் ஊதியத்திலிருந்து 10 விழுக்காட்டை வழங்குமாறு கேட்டிருந்தனர்
என்பது குறிப்பிடத்தக்கது