வத்திக்கான் பசிலிக்காவுக்கு அடியிலுள்ள திருத்தந்தையர்கள் கல்லறை இருக்கும் இடத்தில்
திருத்தந்தை சிறப்பு வழிபாடு
நவ.03,2009 உலகம் முழுமையும் இத்திங்களன்று சிறப்பிக்கப்பட்ட சகல ஆன்மாக்களின் நினைவு
நாள் மாலை, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவுக்கு அடியிலுள்ள திருத்தந்தையர்கள் கல்லறை
இருக்கும் இடத்தில் சிறப்பு வழிபாடு ஒன்றை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் நடத்தினார்.
திருச்சபையில்
பணியாற்றியுள்ள அனைத்துத் திருத்தந்தையர்கள், குறிப்பாக திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுலின்
ஆன்ம சாந்திக்காக நடத்தப்பட்ட இச்செப வழிபாட்டின் போது உலகில் இறந்தோர் அனைவருக்காகவும்,
வாழ்வோருக்காகவும் செபிக்கப்பட்டது.
போரில் உயிரிழந்தவர்கள் மற்றும் பல்வேறு வன்முறைகளுக்குப்
பலியானவர்களையும் இச்சிறப்பு செப வழிபாட்டின் போது நினைவுகூர்ந்து
அவர்களுக்காகவும்
செபித்தார் பாப்பிறை.
இதற்கிடையே, நவம்பர் 2ம் தேதி அனைத்து ஆன்மாக்களின் நினைவு
நாள் அன்று காலை பல ஆயிரக்கணக்கானோர் திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் கல்லறையைத் தரிசித்துச்
சென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.