நவம்பர் 04, இன்றைய புனிதர் - புனிதசார்லஸ்பொரோமியொ.
1538ஆம் ஆண்டு பிறந்த சார்லஸ் அவரது 22ஆம் வயதில் ஒரு தியோகொனாக இருந்த போதே மிலான் நகரத்தின்
பொறுப்பாளராக நியமனம் பெற்றார். த்ரேந்த் சங்கத்தைத் திருத்தந்தை ஐந்தாம் பத்திநாதர்
மீண்டும் கூட்டிய போது, அதன் பணிகளில் முன்னிலை வகுத்த சார்லஸ் அச்சங்கத்தின் உயிர் நாடி
என்று அழைக்கப்பட்டார். கிறீஸ்தவ ஞான உபதேசம், குருக்கள் தினமும் பயன்படுத்தும் செபப்
புத்தகம் இவற்றில் சீரிய பல மாற்றங்களைச் செய்தார். மிலான் மறைமாவட்டத்தின் ஆயராகப் பொறுப்பேற்றதும்,
ஆயர் இல்லத்தில் மிகவும் எளிய வாழ்வைப் பின்பற்றினார். நாளொன்றுக்கு ஒருமுறை மட்டுமே உணவருந்தினார். ஆயர்
இல்லத்தின் ஆடம்பரத்தை முற்றிலும் மாற்றி யமைத்தார். மிலான் நகரில் 1584ஆம் ஆண்டு தன்
46வது வயதில் காலமானார். அவரைத் திருத்தந்தை ஐந்தாம் பவுல் 1610ஆம் ஆண்டு புனிதராக உயர்த்தினார்.