2009-11-03 15:07:03

அமெரிக்காவில் அருட்சகோதரி ஒருவர் அடையாளம் தெரியாத மனிதர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்


நவ.03,2009 அமெரிக்காவின் பூர்வீக குடிமக்கள் மற்றும் கறுப்பினத்தவரிடையேயான பணிகளுக்கான புனித திருநற்கருணை சகோதரிகள் சபையின் அருட்சகோதரி ஒருவர் கடந்த ஞாயிறன்று அடையாளம் தெரியாத மனிதர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நியுமெக்சிகோ மாநிலத்தில் நவாஹோ எனுமிடத்திலுள்ள புனித பெர்னார்டு கன்னியர் இல்லத்தில் வாழ்ந்த 64 வயது அருட்சகோதரி மார்கிரேட் பார்ட்சின் கொலையுண்ட உடல் ஞாயிறன்று காலை கண்டெடுக்கப்பட்டது.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் பழங்குடி மக்கள், ஆப்ரிக்க இனத்தவர் மற்றும் குடிபெயர்ந்தவர்களிடையே சிறப்பு சேவையாற்றி வந்த அருட்சகோதரி பார்ட்ச், நீதி மற்றும் அமைதிக்கென தீராத தாகம் கொண்டு உழைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.










All the contents on this site are copyrighted ©.