அகர்த்தலாவில் மாநில அளவிலான முதல் திருநற்கருணை செப பவனி
நவ.03,2009 இந்தியாவின் திரிபுரா மாநிலத் தலைநகர் அகர்த்தலாவில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட
கத்தோலிக்கர்கள் ஒன்றுகூடி மாநில அளவிலான முதல் திருநற்கருணை செப ஊர்வலத்தை நடத்தினர்.
அகர்த்தலா
மறைமாவட்டத்தின் 16 பங்குத் தளங்களிலிருந்தும் மக்கள் கலந்து கொண்ட இத்திருநற்கருணை பவனியை
அகில இந்திய கத்தோலிக்க ஐக்கிய அவை ஏற்பாடு செய்திருந்தது.
முப்பது இலட்சம் மக்கட்தொகையைக்
கொண்ட திரிபுரா மாநிலத்தின் 31.5 விழுக்காட்டு பூர்வீக மக்களுள் பெரும்பாலானோர் கத்தோலிக்கர்.
13
ஆண்டு பழமையுடைய அகர்த்தலா மறைமாவட்டத்தில் இடம் பெற்ற மாநில அளவிலான இம்முதல் திருநற்கருணை
பவனி, ஆயர் லூமென் மொந்தைரோ தலைமையில் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு இரண்டு மணி நேரம்
நடைபெற்றது.