2009-10-29 15:43:41

பிலிப்பின்ஸ் நாட்டில் கல்லறைத் திருவிழா கல்லறைகளில் இடம் பெறாது - ஆயர் லம்பொன்


அக். 29, 2009. அண்மையில் மலைகார்மேல் மாதா பேராலயத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பின் விளைவாக, பிலிப்பின்ஸ் நாட்டில்  ஜோலோ (Jolo) மறைமாவட்டத்தில் கல்லறைத் திருவிழா கல்லறைகளில் இடம் பெறாது என அம்மறைமாவட்ட ஆயர் அன்ஜெலிதோ லம்பொன் (Angelito Lampon) கூறியுள்ளார். அக்டோபர் 27 அன்று நடைபெற்ற இந்த குண்டு வெடிப்பில் கோவில் ஜன்னல்களில் சில பழுதடைந் துள்ளதாகவும், வேறு எந்த வித சேதமும் இல்லை எனவும் கூறிய ஆயர், ஜோலோவில் உள்ளக் கல்லறையின் அருகில் உள்ள கோவிலில் இந்த குண்டு வெடிப்பு நடந்ததால், மக்களின் பாதுகாப்பு கருதி இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதென தெரிவித்தார்.  பிலிப்பின்ஸ் நாட்டில் அக்டோபர் 31 மாலையிலிருந்து நவம்பர் 2 மாலை வரை கல்லறைத் திருநாள் ஆடம்பரமாகக் கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.