இங்கிலாந்தில் பாராளுமன்ற அங்கத்தினர்களின் ஆன்மீக பணிக்கு கத்தோலிக்க குருநியமனம்
அக். 29, 2009. இங்கிலாந்தில் பாராளுமன்ற அங்கத்தினர்களின் ஆன்மீகத் தேவைகளை நிறைவு செய்யும் பணிக்கு அருட்தந்தை
பேட் ப்ரவுன் (Pat Browne) நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த ஆன்மீகப் பணிக்கு கத்தோலிக்க
குரு ஒருவர் தேவை என்று வெஸ்ட்மின்ஸ்டேர் அரண்மனை அனுப்பிய விண்ணப்பத்தை ஏற்று இந்த நியமனம்
செய்யப்பட்டுள்ளதென பேராயர் வின்சென்ட் நிக்கோல்ஸ் தெரிவித்தார். அருட்தந்தை பேட் ப்ரவுன் தனது
பங்கு பணிகளோடு இந்தப் பணியையும் செய்வார் என்றும், பாராளுமன்ற அங்கத்தினர்களுக்கு மட்டுமல்லாது, வெஸ்ட்மின்ஸ்டேர்
அரண்மனையைச் சார்ந்த அனைத்து கத்தோலிக்கர்களின் ஆன்மீகத் தேவைகளையும் கவனிப்பார் என்றும்
பேராயர் கூறினார்.