2009-10-28 15:51:54

வளரும் நாடுகளின் ஆயர்கள் இணைந்து  பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும்


அக். 28, 2009 வளரும் நாடுகளில் காணக்கிடக்கும் பிரச்சனைகளைச் சமாளிக்க இந்நாடுகளில் உள்ள ஆயர்கள் இணைந்து வழிகள் தேட வேண்டும் என ஆசிய ஆயர்கள் பேரவையின் பொதுச் செயலர் பேராயர் ஒர்லாண்டோ கெவேதோ (Orlando Quevedo ) விடுத்த அழைப்பு  அண்மையில் நடந்து முடிந்த ஆப்பிரிக்காவிற்கான ஆயர் பேரவையின் தீர்மானங்களில் ஒன்றாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.  ஆப்பிரிக்கா, ஆசியா, லத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள தலத்திருச்சபைகள் இன்னும் அதிகமாக இணைந்து செயல்படவேண்டுமென பேராயர் கூறியதை சிறப்பு பேரவை ஆயர்கள் பெரிதும் வரவேற்றனர். தெற்கு-தெற்கு என்ற பெயரில் உலகின் தெற்கு பகுதிகளில் உள்ள பல நாடுகளின் திருச்சபைகள் இந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆயர்கள் கருத்து தெரிவித்தனர்.







All the contents on this site are copyrighted ©.