AIDS நோயினால்பாதிக்கப்பட்டவர்களுக்குவீடுகள்கட்டித்தரும்பணியில்
மியான்மார்திருச்சபை
அக். 28, 2009 மியான்மார் திருச்சபையைச் சார்ந்த கருணா ப்யாய் (Karuna Pyay) சமூக சேவை
அமைப்பு HIV-AIDS நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டித்தரும் பணியில் ஈடுபட்டுள்ளது.
2005ஆம் ஆண்டு முதல் இந்த நோயுள்ளவர்களுக்கு உணவு, மருந்துகள், உறைவிடம் ஆகியவற்றை வழங்கி வரும்
இந்த அமைப்பினால், பல வகையிலும் புறக்கணிக்கப்பட்டுள்ள இவர்கள் மீண்டும் மதிப்புடன் வாழ
முடிகிறது என்று இவ்வமைப்பின் இயக்குனர் அருட்தந்தை டேவிட் பா தீன் (David Ba Thein )
கூறினார். இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களைக் கொண்டே இந்நோயுள்ளவர்களுக்குத் தேவையான நடைமுறை பயிற்சிகளும் தரப்படுகிறது என்று
மேலும் கூறினார் அருட்தந்தை பா தீன். அண்மையில் வெளியான ஐ.நா.வின் HIV-AIDS குறித்த
அறிக்கையின் படி, மியான்மாரில் 2லட்சத்து 40 ஆயிரம் பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது
குறிப்பிடத்தக்கது.