பகுதிநேரப் பணியாளர்கள் நிலைமைகளை மேம்படுத்தஅழைப்புவிடுத்தார்
கொரிய ஆயர்
அக். 27, 2009 பகுதிநேரப் பணியாளர்கள் மற்றும் ஒப்பந்தப் பணியாளர்களின் நிலைமைகளை மேம்படுத்தத் தலதிருச்சபை உழைப்பதுடன்,
தானே ஒரு எடுத்துக காட்டாகவும் செயல்பட வேண்டும் என அழைப்புவிடுத்தார் கொரிய ஆயர் போனிபாஸ்
சொய் கி சான். கொரிய நாட்டின் ஒரு கோடியே அறுபது லட்சம் தொழிலாளர்களுள் பாதிக்கும் மேற்பட்டோர்
பகுதிநேரப் பணியாளர்களாகவோ ஒப்பந்தப் பணியாளர்களாகவோ இருக்கும் நிலையில் கத்தோலிக்க மருத்துவ
மனைகளிலும் இது ஏறத்தாழ 30 விழுக்காடாக இருப்பது பெருமளவில் குறைக்கப்படவேண்டுமென அழைப்பு
விடுத்தார், நீதி மற்றும் அமைதிக்கான கொரிய ஆயர் பேரவையின் தலைவர் ஆயர் சொய் கி சான்.