அக். 27, 2009 கிறீஸ்தவ ஐக்கியத்தை ஊக்குவிப்பதில் பெரும் முயற்சிகளுடனும் உறுதியுடனும்
செயல்படுவதற்காக திருத்தந்தை 16 ஆம் பெனெடிக்ட்டை பாராட்டுவதாகத் தெரிவித்தார் TAIZE அமைப்பின் தலைவர் சகோதரர் அலாய்ஸ் லொஸெர்.
கிறிஸ்தவ ஐக்கியத்திற்கான அமைப்பான TAIZE இன் தலைவர், இவ்வாண்டிற்கான கிறிஸ்தவ ஐக்கிய
விருதைப் பெற்று உரையாற்றியபோது, அண்மையில் லேபெப்ரே அமைப்புக்கும் கத்தோலிக்கத் திருச்சபைக்கும்
இடையே துவங்கியுள்ள பேச்சு வார்த்தைகள் முக்கியத்துவம் நிறைந்தவை என்றார். கத்தோலிக்கர்களுக்கும்,
ஆர்தொடாக்ஸ் கிறிஸ்தவ சபைகளுக்கும் இடையே இடம் பெற்று வரும் பேச்சு வார்த்தைகளும் நம்பிக்கைத்
தருபவைகளாக உள்ளன என்றார் சகோதரர் அலாய்ஸ் லொஸெர்.