2009-10-24 17:40:46

மனச்சான்றின் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என சீன அரசை வலியுறுத்துமாறு ஒபாமாவுக்கு ஹாங் காங் கத்தோலிக்கர்கள் விண்ணப்பம்


அக். 24, 2009 நவம்பரில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா சீனாவில் பயணம் மேற்கொள்ளும்போது, அந்நாட்டில் சிறை வைக்கப்பட்டுள்ள அனைத்து மனச்சான்றின் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என சீன அரசை வலியுறுத்துமாறு ஹாங் காங் கத்தோலிக்கர்கள் விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளனர்.
ஹாங் காங் மறைமாவட்ட நீதி மற்றும் அமைதி அவை, ஹாங் காங்கில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் சமர்ப்பித்துள்ள இந்த விண்ணப்பத்தில், நோபெல் அமைதி விருது பெற்றுள்ள ஒபாமா, அவ்விருதின் நோக்கங்களுக்கு இயைந்த வகையில் சீன மனச்சான்றின் கைதிகளின் விடுதலைக்காக முயற்சிக்க வேண்டும் என விண்ணப்பித்துள்ளது. பத்திரிகையாளர்கள் மற்றும் மனச்சான்றின் கைதிகளின் விடுதலைக்காக அனைத்து நாட்டுத் தலைவர்களும் சீன அரசை வலியுறுத்த வேண்டும் எனவும் தங்கள் அறிக்கையில் விண்ணப்பித்துள்ளனர் ஹாங் காங் கத்தோலிக்கர்கள்.







All the contents on this site are copyrighted ©.