அக். 24, 2009 சூடானில் மோதல்களாலும், வறட்சியாலும் பாதிக்கப்பட்ட 35 ஆயிரம் மக்களுக்கு
உணவூட்ட 34 லட்சம் டாலர் தேவைப்படுவதாக அறிவித்துள்ளது சர்வதேச காரித்தாஸ் அமைப்பு. தற்போது
தென் சூடானில் இடம் பெற்று வரும் வன்முறைகள் இப்படியே தொடர்ந்தால், 22 ஆண்டு உள்நாட்டு
போரால் பாதிக்கப்பட்டிருக்கும் சூடான் பெரும் பஞ்சச் சாவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்ற
கவலையை வெளியிட்டார் காரித்தாஸ் அமைப்பின் அதிகாரி அலிஸ்டர் டட்டன். அண்மைய வன்முறைகளால்,
தென் சூடானில் 68 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து, நாட்டிற்குள்ளேயே குடிபெயர்ந்துள்ளனர்.