அக். 23, 2009 ஆப்பிரிக்காவுக்கான சிறப்பு ஆயர் பேரவையில் பங்கு பெறும் 275 அங்கத்தினர்களுக்கு முதலுதவி
பேழைகளைப் பரிசாக அளித்துள்ளது நல ஆதரவு மெய்ப்பு பணிக்கான திருப்பீட அவை. திருத்தந்தையின்
ஆசீர் பெற்ற இந்தப் பேழைகளைப் பேரவை அங்கத்தினர்களுக்கு வழங்கியப் பேராயர் சிக்மன்ட் ஸிமொவ்ஸ்கி
(Zygmund Zimowski ), இந்தப் பேழைகள் ஆப்பிரிக்க மக்களுடன் திருச்சபை சிறப்பான முறையில்
இணைந்துள்ளது என்பதைக் காட்டும் ஓர் அடையாளம் என்று கூறினார். இந்த முதலுதவிப் பேழைகளில்
ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, இதயத் துடிப்பு ஆகியவைகளைக் கண்டறியும் கருவிகளும், பல்வேறு
மருந்துகள், காயங்களுக்கு இடப்படும் பாதுகாப்பு பொருட்கள் ஆகியவை அடங்கியுள்ளன. ஆப்ப்ரிக்காவில்,
எளிதில் சென்றடைய முடியாத இடங்களுக்கு மருத்துவ உதவி செய்ய ஏதுவான வகையில் இப்பேழைகள் அமைக்கப்பட்டுள்ளன
என்று பேராயர் ஸிமொவ்ஸ்கி கூறினார்.