அக். 23, 2009 எருசலேம் புனித செபமாலையின் தோமினிக்கன் கன்னியர் சபையைத் தோற்றுவித்த
அருட்சகோதரி Soultaneh Maria Ghattas வருகிற நவம்பர் 22ஆம் நாள் முத்திபேறு பெற்றவராக
உயர்த்தப் படுவார். பாலஸ்தீனத்தைச் சார்ந்த ஒருவர் இந்த நிலையை அடைவது குறித்து அந்நாட்டு
கத்தோலிக்கர்கள், சிறப்பாக, கிழக்கு எருசலேமில் உள்ள செபமாலைக் கன்னியர் உயர்நிலைப் பள்ளி மாணவ,
மாணவியர் பெரிதும் மகிழ்வதாகச் செய்தி குறிப்பு ஒன்று கூறுகிறது. இடிந்து விழுந்த கழிவு
நீர் தொட்டியில் சிக்கிய 5 பெண்களில் ஒருவரான நதாலி சானனிரியின் தாயார் அருட்சகோதரி Maria Ghattas இடம் வேண்டியதன்
பயனாக, நதாலி காப்பாற்றப்பட்டது புனிதர்படிக்கான திருப்பேராயத்தால் ஒரு புதுமையாக ஏற்கப்பட்டு அருட்சகோதரி
முத்திபேறு பெறுவதற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது. இது போன்ற அற்புதமான பல சம்பவங்கள் தங்கள்
வாழ்விலும் நடந்து வருவதாக செபமாலைக் கன்னியர் உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் கூறி வருகின்றனர்.